عن أبي هريرة ـ رضي الله عنه ـ قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لا يَلِجُ النارَ رجُل بَكى من خشية الله حتى يَعود اللَّبنُ في الضَّرْع، ولا يَجتمع غُبَارٌ في سبيل الله وَدُخَانُ جهنم».
[صحيح] - [رواه الترمذي والنسائي وأحمد]
المزيــد ...

அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழுத மனிதன்،கறந்த பால்அதன்காம்பில் நுழையும் வரையில்,நரகம் செல்ல மாட்டான்.மேலும் அல்லாஹ்வின் பாதையில் (செல்லும் போது) படிந்த புழுதியும்,நரகத்தின் புகையும் ஒன்று சேராது.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
ஸஹீஹானது-சரியானது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பதும்,பாவங்களை விட்டும் விலகி நடப்பதுமே பெரும்பாலும் அல்லாஹ்வின் மீது அச்சம் கொள்ளக் காரணமாக அமைகின்றன. எனவேதான்"அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அழுத மனிதன்,பால் அதன் மடியில் திரும்பிச் செல்லும் வரையில் நரகம் செல்ல மாட்டான்"என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.இது அசாத்தியமான ஒரு விடயத்தை இன்னொரு அசாத்தியமான விடயத்துடன் தொடர்பு படுத்திக் கூறும் வசன முறையைச் சார்ந்ததாகும்.அதாவது எப்படி கரந்த பால் திரும்பவும் அதன் மடியில் போய் சேருவது அசாத்தியமானதோ,அது போன்று அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தின் காரணமாக அழுத ஒரு அடியான் நரகம் செல்வதும் அசாத்தியமானது,என்று நபியவர்கள் இதன் மூலம் எடுத்துக் காட்டினார்கள்.மேலும் இம்மை, மறுமை போன்று பரஸ்பரம் முரண்பட்ட இரண்டு விடயங்கள் எப்படி ஒன்று சேராதோ அது போன்று அல்லாஹ்வின் பாதையில் சென்ற அடியானைத் தொட்ட புழுதியும் நரகத்தின் புகையும் பரஸ்பரம் முரண்பட்ட இரண்டு விடயங்களாகும்.எனவே அவை இரண்டும் ஒன்று சேராது.ஆகையால் அல்லாஹ்வின் பாதையில் கலந்து கொண்ட அடியான் நரகம் செல்ல மாட்டான்,என்பதை ரஸூல் (ஸல்) அவர்கள் இதன் மூலம் தெளிவுபடுத்தினார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண