+ -

عَنْ ‌عَدِيِّ بْنِ حَاتِمٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْيَهُودُ مَغْضُوبٌ عَلَيْهِمْ، وَالنَّصَارَى ضُلَّالٌ».

[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 2954]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அதிய்யிப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
' (இறை) கோபத்திற்கு உள்ளானோர்; யூதர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் வழிதவறியோர் ஆவர்'

[ஸஹீஹானது-சரியானது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்] - [سنن الترمذي - 2954]

விளக்கம்

யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான ஒரு சமூகத்தினர். காரணம் அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தும் அதனை எடுத்து நடக்கவில்லை. கிறிஸ்தவர்கள் வழிதவறிய சமூகமாவர். அவர்கள் அறிவின்றி செயற்பட்டோர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அறிவையும் செயல்பாட்டையும் ஒன்றுசேர பெற்றிருப்பதே கோபத்திற்குள்ளான மற்றும் வழிதவறியோரின் வழியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழிமுறையாகும்.
  2. யூத, கிறிஸ்தவ வழிமுறைகளைப் பின்பற்றுவதை விட்டும் எச்சரித்தலும், நேரான பாதையான இஸ்லாத்தைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளமையும்.
  3. யூத கிறிஸ்தவர்கள் அனைவரும் இறைகோபத்திற்கு ஆளானோர் ஆவர். என்றாலும் யூதர்களின் பிரத்தியேகமான பண்புகளில் ஒன்றாக இறை கோபமும், கிறிஸ்தவர்களின் பிரத்தியே பண்பாக வழிதவறி நடந்தமையும் காணப்படுகிறது.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் உய்குர் மொழி துருக்கிய மொழி போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு