عَنْ أَبِي مُـحَمَّدٍ الحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - سِبْطِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَيْحَانَتِهِ-، قَالَ: حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«دَعْ مَا يَرِيبُك إلَى مَا لَا يَرِيبُكَ».
[صحيح] - [رواه الترمذي والنسائي] - [الأربعون النووية: 11]
المزيــد ...
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரரும்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவருமான அலி இப்னு அபூதாலிப் அவர்களின் மகன் அபூ முஹம்மது அல் ஹஸன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டு நினைவில் இருத்திக் கொண்டேன் :
'உமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றை விட்டு விட்டு அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எடுத்துக் கொள்;'
-
சொல் மற்றும் செயல்களில், குறித்த விடயம் தடுக்கப்பட்டதா ? இல்லையா? அல்லது அது ஹலாலா ஹராமா என்ற சந்கேகத்திற்கிடமானவற்றை விட்டு விட்டு எந்த சந்தேகமுமில்லாத நல்ல மற்றும் ஹலாலான –தெளிவாக அனுமதிக்கப்பட்ட- விடயங்களை செய்யுமாறு இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.