عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما أنَّ رَسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليْه وسلَّمَ، قال:
«قَدْ أَفْلَحَ مَن أَسْلَمَ، وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللَّهُ بما آتَاهُ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1054]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
யார் இஸ்லாத்தை ஏற்று, போதுமான அளவு வாழ்வாதாரமும்; வழங்கப்பட்டு, அல்லாஹ் அவருக்கு வழங்கியுள்ளதில் போதுமென்ற மனதையும் வழங்குகின்றானோ, அவர் வெற்றி பெற்று விட்டார்.

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم - 1054]

விளக்கம்

இங்கு நபியவர்கள், யார் தனது ரப்புக்கு வழிப்பட்டு, நேர்வழி பெற்று, இஸ்லாத்தை அடையும் பாக்கியத்தையும் பெற்று, கூடுதல், குறைவு இன்றி ஹலாலான வாழ்வாதாரத்தில் போதுமான அளவையும் பெற்றுக்கொண்டு, அவற்றுடன் அல்லாஹ் அவரை தான் வழங்கியதில் திருப்தியடையும் ஒருவராகவும் ஆக்கிவிட்டான் என்றால் அவன் வெற்றியடைந்து விட்டான் என்பதாக அறிவிக்கின்றார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஒரு மனிதனின் சுபிட்சம் என்பது, அவனது மார்க்கம் பரிபூபரணம் அடைவதுடன், போதுமான அளவு வாழ்வாதாரமும், அல்லாஹ் வழங்கியுள்ளதில் திருப்தியும் இருப்பதிலேயே இருக்கின்றது.
  2. இஸ்லாம், மற்றும் நபிவழி ஆகியவற்றுடன், இவ்வுலக வாழ்வில் வழங்கப்பட்டுள்ளவற்றில் திருப்தியடைந்து கொள்வதை ஊக்குவித்தல்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (40)
மேலதிக விபரங்களுக்கு