عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما أنَّ رَسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليْه وسلَّمَ، قال:
«قَدْ أَفْلَحَ مَن أَسْلَمَ، وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللَّهُ بما آتَاهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1054]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
யார் இஸ்லாத்தை ஏற்று, போதுமான அளவு வாழ்வாதாரமும்; வழங்கப்பட்டு, அல்லாஹ் அவருக்கு வழங்கியுள்ளதில் போதுமென்ற மனதையும் வழங்குகின்றானோ, அவர் வெற்றி பெற்று விட்டார்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 1054]
இங்கு நபியவர்கள், யார் தனது ரப்புக்கு வழிப்பட்டு, நேர்வழி பெற்று, இஸ்லாத்தை அடையும் பாக்கியத்தையும் பெற்று, கூடுதல், குறைவு இன்றி ஹலாலான வாழ்வாதாரத்தில் போதுமான அளவையும் பெற்றுக்கொண்டு, அவற்றுடன் அல்லாஹ் அவரை தான் வழங்கியதில் திருப்தியடையும் ஒருவராகவும் ஆக்கிவிட்டான் என்றால் அவன் வெற்றியடைந்து விட்டான் என்பதாக அறிவிக்கின்றார்கள்.