«مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ، وَاللهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الْأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللهِ، لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 71]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
'அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான் அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை பகிர்ந்தளிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது'
அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் நபியவர்கள் அல்லாஹ் அவருக்கு அளித்துள்ள அறிவு மற்றும் ஆகாரம் போன்றவற்றை பகிர்ந்தளிப்பவராக உள்ளார். உண்மையில் அல்லாஹ்வே வழங்குபவன். அவனைத் தவிர உள்ள மற்றோர் இவற்றிற்கான காரணங்களாக உள்ளனர். அவனின் அனுமதியின்றி எவ்வித பயனையும் அவை தரமாட்டாது. இந்தச் சமுதாயத்தினர் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணி நடப்பதில் உறுதியாக இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது.
في الحديث دليل على عظمة التفقه في الدين والحث عليه.اردو