عَنْ عَائِشَةَ أُمِّ المؤْمنينَ رَضيَ اللهُ عنها قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي لَمْ يَقُمْ مِنْهُ:
«لَعَنَ اللهُ الْيَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» قَالَتْ: فَلَوْلَا ذَاكَ أُبْرِزَ قَبْرُهُ، غَيْرَ أَنَّهُ خُشِيَ أَنْ يُتَّخَذَ مَسْجِدًا.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 529]
المزيــد ...
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் மீண்டெழாத அந்த மரணப் படுக்கையில் இவ்வாறு கூறினார்கள் :
யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிக்கட்டும். அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகளை தொழுமிடங்களாக மாற்றிக் கொண்டார்கள்.' ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : அவ்வாறில்லாவிட்டால் அவர்களது கப்ரும் வெளிக்காட்டப்பட்டிருக்கும். எனினும், அது தொழுமிடமாக மாற்றப்படலாம் எனப் பயப்படப்பட்டது.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 529]
இங்கு உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் மீண்டெழாத அந்த மரணப் படுக்கையில் இவ்வாறு கூறினார்கள் : யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபித்து, தனத அருளை விட்டும் அவர்களைத் தூரப் படுத்தட்டும். ஏனெனில் அவர்கள் தமது நபிமார்களின் மண்ணறைகள் மீது கட்டிடங்கள் கட்டியோ, அவற்றை நோக்கி அல்லது அவற்றிற்கு அருகாமையில் தொழுதோ அவற்றைத் தொழுமிடங்களாக மாற்றிக்கொண்டார்கள்.' பின்பு ஆஇஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : நபியவர்களது இந்தத் தடையும் எச்சரிக்கையும் இல்லாவிட்டால், மேலும், யூத, கிறஸ்தவர்கள் தமது நபிமார்களின் கப்ருகளுக்குச் செய்ததது போன்று, நபியவர்களது கப்ருக்கும் செய்யப்படலாம் என்று நபித்தோழர்கள் பயப்படவும் இல்லையென்றிருந்தால், அவர்களது கப்ரும் வெளிக்காட்டப்பட்டிருக்கும்.