عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ» قِيلَ: مَا هُنَّ يَا رَسُولَ اللهِ؟، قَالَ: «إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ، وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ، وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ، وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللهَ فَسَمِّتْهُ، وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2162]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்யவேண்டிய கடமைகள் ஆறு என நபியவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவை எவை எனக் கேட்கப்பட்டது ? அதற்கு நபியவர்கள் : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறுவீராக. அவர் உன்னை (விருந்துக்கு) அழைத்தால் அதற்கு பதிலளிப்பீராக. உன்னிடம் அறிவுரை கேட்டால் அவருக்கு அறிவுரை கூறுவீராக. அவர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுவீராக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரிக்கச் செல்வீராக. அவர் மரணித்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்காக பின்தொடர்ந்து செல்வாயாக என்று கூறினார்கள்".
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 2162]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறு என தெளிவு படுத்துகிறார்கள் அவை பின்வருமாறு : முதலாவது : ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அஸ்ஸலாமு அலைக்கும் என வாழ்த்து கூற வேண்டும். அவர் அதற்கு வஅலைக்குமுஸ்ஸலாம் என பதில் கூறுவார். இரண்டாவது : வலீமா –திருமணவிருந்து- போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக அழைத்தால் அவரின் அழைப்பை ஏற்று கலந்து கொள்ளுதல். மூன்றாவது: ஏதாவது ஒரு விடயத்தில் அறிவுரை கேட்டால் அவருக்கு மனதார அறிவுரை கூறுங்கள். இந்த விடயத்தில் அவருக்கு ஏதாவது சலுகைக் காட்டி உண்மையை மறைக்கவோ அல்லது ஏமாற்றவோ கூடாது. நான்காவது: அவர் தும்மிய பின் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால் அதற்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறுங்கள். அதற்கவர் யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹு பாலகும் என்று பதிலுரைப்பார். ஐந்தாவது : அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை சுகம் விசாரியுங்கள். ஆறாவது : அவர் மரணித்துவிட்டால் அவருக்கு தொழுகை நடாத்தி அவரை அடக்கம் செய்யும் வரை அவரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வது.