عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلاَثٍ: صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيِ الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1981]
المزيــد ...
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
எனது உற்ற தோழர், முஹம்மத் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விடயங்களைக் கொண்டு உபதேசம் செய்தார்கள். 1.ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். 2. இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல். 3. உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1981]
தனது நேசத்திற்குரிய தோழராகிய, நபி (ஸல்) அவர்கள் தனக்கு மூன்று விடயங்களை உபதேசமாகக் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
முதலாவது, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல்.
இரண்டாவது, ஒவ்வொரு நாளும் இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல்.
மூன்றாவது, உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல். இது, இரவின் இறுதிப் பகுதியில் கண்விழிக்க முடியாது எனப் பயப்படுபவர்களுக்காகும்.