عن أنس رضي الله عنه، قال:
قال رسول الله صلى الله عليه وسلم لأبي بكر وعمر: «هذان سَيِّدا كُهُول أهل الجنة من الأوَّلِين والآخِرين إلا النبيِّين والمرسلين».

[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 3664]
المزيــد ...

அனஸ்பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பார்த்து, “நபிமார்களையும் இறைத்தூதர்களையும் தவிர ஆரம்பமாகவும் இறுதியாகவும் வந்த அனைத்து வயதானவர்களுக்கும் சொர்க்கத்தில் இவர்களே தலைவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்கள்.

[சரியானது] - [இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்] - [ஸுனன் திர்மிதீ - 3664]

விளக்கம்

இங்கு நபியவர்கள், அபூபக்கர் அஸ்ஸித்தீக், உமர் அல்பாரூக் ஆகிய இருவரும் நபிமார்களுக்குப் பின்னர் மிகச் சிறந்த மனிதர்கள் என்றும் சுவனம் நுழைந்தவர்களில் நபிமார்களுக்கும் இறைத் தூதர்களுக்கும் பின்னர் மிகச் சிறந்தவர்கள் என்றும் அறியத் தருகின்றார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர்தான் நபிமார்களுக்கும் இறைத்தூதருக்கும் பின்னர் மிகச் சிறந்தவர்களாவர்.
  2. சுவனத்தில் வயதானவர்கள் இருக்க மாட்டார்கள். அங்கு நுழைபவர்கள் அனைவருமே 33 வயதில் தான் இருப்பார்கள். இந்த ஹதீஸின் அர்த்தம், யாரெல்லாம் உலகில் வயதாகிய நிலையில் மரணிக்கின்றார்களோ அவர்களுக்கு இருவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்பதாகும். அல்லது இந்த ஹதீஸ் கூறப்படும் தருவாயில் அவர்கள் இருந்த நிலையை வைத்து கூறப்பட்டிருக்கலாம்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது இந்தோனேஷியன் மேலதிக விபரங்களுக்கு (44)
மேலதிக விபரங்களுக்கு