عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
«إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1631]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும்.
1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி 3.இறைவனிடம் பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தைகள்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 1631]
ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் செயல்களும் நின்றுவிடும். என்றாலும் அவரின் மரணத்தின் பின் மூன்று செயல்கள் மூலம் மாத்திரமே அவருக்கு நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் அச்செயல்களுக்கு அவரே காரணமாக இருந்திருக்கிறார். அவைகள் வருமாறு :
முதலாவது : அல்லாஹ்வின் பாதையில் எதையாவது அர்ப்பணித்தல், (வக்ப் செய்தல்) பள்ளிவாசல்கள் கட்டுதல், கிணறுகள் தோண்டுதல் போன்ற தொடர்ச்சியான வெகுமதியையும் நிரந்தரமான நன்மையையும் பெற்றுத் தரும் தர்மம்.
இரண்டாவது: மக்களுக்கு பயனளிக்கும் அறிவு. இதில் புத்தகங்களை எழுதுதல் மற்றும் கற்பித்தல் போன்றன அடங்கும். ஒருவர் மற்றொருவருக்கு அறிவைப் புகட்டி, அந்த நபர் தனக்கு கற்பித்தவரின் மரணத்திற்குப் பிறகு அதை மற்றவர்களுக்கு கற்பித்தால் பரப்பினால் அக்கூலி மரணித்தவருக்கு வந்து சேரும்.
மூன்றாவது: தனது பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்யும் இறைவிசுவாசமும் நல்லொழுக்கமும் நிறைந்த குழந்தை.