عَنِ ابنِ مَسعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ: الثَّيِّبُ الزَّانِي، وَالنَّفْسُ بِالنَّفْسِ، وَالتَّارِكُ لِدِينِهِ المُفَارِقُ لِلْجَمَاعَةِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1676]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
மூன்றில் ஒரு காரணத்திற்காகவே தவிர ஒரு முஸ்லிமின் இரத்தம் (அவரைக் கொலைசெய்வது) ஹலாலாகமாட்டாது: திருமணம் முடித்தபின் விபச்சாரம் செய்பவர், இன்னொருவரைக் கொலைசெய்தவர், (முஸ்லிம்) சமூகத்தைப் பிரிந்து, இஸ்லாத்தை விட்டுச் செல்பவர்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 1676]
இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் மூன்றில் ஒரு விடயத்தை செய்தாலே தவிர, அவரது இரத்தம் (உயிர்) ஹராமாகும் என்று தெளிவு படுத்துகின்றார்கள். முதலாவது : ஒருவர் முறையான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் செய்தபின்னரும் விபச்சாரத்தில் ஈடுபடல். கல்லெறிந்து அவரைக் கொல்வது ஹலாலாகும். இரண்டாவது: பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரை, உரிமையின்றி வேண்டுமென்றே கொலை செய்தவர். இவர் - நிபந்தனைகள் பேணப்பட்ட பின்னர் - கொல்லப்படுவார். மூன்றாவது : முஸ்லிம் சமூகத்தை விட்டும் பிரிந்து செல்பவர். அது ஒன்றில் முழுமையாக இஸ்லாத்தை விட்டு வெளியேறி செல்வதாக இருக்கலாம். அல்லது முழுமையாக வெளியேறாமல், இஸ்லாத்தின் சில பகுதிகளை விட்டு வெளியேறிச் செல்வதாக இருக்கலாம். உதாரணமாக, அடர்ந்தேருபவர்கள், வழிப்பறிக்கொள்ளையர்கள், கவாரிஜ்கள் போன்ற ஆட்சிக்கெதிராகப் போரிடுபவர்கள்.