عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا:
أَنَّ رِجَالًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي المَنَامِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَى رُؤْيَاكُمْ قَدْ تَوَاطَأَتْ فِي السَّبْعِ الأَوَاخِرِ، فَمَنْ كَانَ مُتَحَرِّيهَا فَلْيَتَحَرَّهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2015]
المزيــد ...
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் ஒன்றில் 'லைலத்துல் கத்ர்' எனும் கண்ணிய மிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் எனது கனவுடன் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் தேடிக் கொள்ளட்டும்!' என்று கூறினார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 2015]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலருக்கு லைலத்துல் கத்ர் ரமழானின் கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக ஒரு கனவில் காட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ' லைலத்துல் கத்ர் இரவு கடைசி ஏழு இரவுகளில் ஒன்றில் நிகழும் என்பதை உங்கள் கனவுகள் ஒருமித்துக் காட்டி நிற்கிறது. எனவே, லைலத்துல் கத்ரைக் அடைய விரும்புபவர், கடைசி ஏழு இரவுகளில் அதை விடாமுயற்சியுடன் தேடட்டும்.' என நபி (ஸல்) அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். லைலத்துல் கத்ர் இரவு ரமழானின் கடைசி பத்து இரவுகளில், குறிப்பாக கடைசி ஏழு இரவுகளில் இருக்க வாய்ப்புள்ளது. ரமழான் மாதம் 30 நாட்கள் என்றால், கடைசி ஏழு இரவுகள் 24 வது இரவில் இருந்து தொடங்குகின்றன. ரமழான் மாதம் 29 நாட்கள் என்றால், அவை 23 வது இரவில் இருந்து தொடங்குகின்றன. நபி (ஸல்) அவர்கள் நம்மை அதிக நல்ல செயல்களைச் செய்யவும், அல்லாஹ்வை நினைவில் கொள்ளவும், இந்த இரவுகளில் அதிகமாக பிரார்த்தனை செய்யவும் ஊக்குவித்தார்கள்.