عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ، وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2812]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் :
நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை இழக்கவில்லை.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 2812]
இங்கு நபி (ஸல்) அவர்கள், தொழுகையாளிகளான முஃமின்கள் அரபுத் தீபகற்பத்தில் மீண்டும் தன்னை வணங்கி, சிலைகளுக்கு ஸுஜூதை செய்வார்கள் என்பதில் ஷைத்தான் நிராசையடைந்து விட்டான் எனவும், எனினும், அவன் பேராசையுடனும், முஸ்லிம்களுக்கு மத்தியில் சச்சரவுகளையும், குழப்பங்களையும், குரோதங்களையும் ஏற்படுத்த முழு மூச்சாக செயற்படுகின்றான் எனவும் அறிவுறுத்துகின்றார்கள்.