عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5778]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
யார் ஒரு மலையில் இருந்து விழுந்து, தற்கொலை செய்துகொள்கின்றாரோ, அவர் நரக நெருப்பில், என்றென்றும் நிரந்தரமாக அடி ஆழத்திற்கு சென்று கொண்டே இருப்பார். யார் நஞ்சை அருந்தி, தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவரது நஞ்சு கையில் இருக்க, நரகநெருப்பில் அதை அருந்திக் கொண்டே என்றென்றும் நிரந்தரமாகவே அதில் தங்கியிருப்பார். யார் கூரிய ஓர் ஆயுதம் கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர், தனது கூரிய ஆயுதத்தால் தன்னைக் குத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நரகநெருப்பில் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 5778]
இங்கு நபியவர்கள் எச்சரிப்பதாவது, யாராவது ஒருவர் வேண்டுமென்றே தன் உயிரை மாய்த்துக் கொண்டால், அவர், அதற்கேற்ற கூலியாக, மறுமை நாளில் நரகநெருப்பில், இவ்வுலகில் எவ்வாறு தன்னை மாய்த்துக்கொண்டாரோ, அதே விதத்தில் தண்டிக்கப்படுவார். எனவே, யார் ஒரு மலையில் இருந்து விழுந்து தன்னை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர் மறுமையின் நரகத்தின் மலைகளில் இருந்து அதன் பள்ளத்தாக்குகளை நோக்கி நிரந்தரமாக விழுந்துகொண்டே இருப்பார். யார் நஞ்சை அருந்தி, தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவரது நஞ்சு கையில் இருக்க, நரக நெருப்பில் அதை அறுந்திக்கொண்டே என்றென்றும் நிரந்தரமாகவே அதில் தங்கியிருப்பார். யார் கூரிய ஓர் ஆயுதம் கொண்டு தன் வயிற்றில் குத்தி, உயிரை மாய்த்துக் கொள்கின்றாரோ, அவர், தனது கூரிய ஆயுதத்தால் தனது வயிற்றில் குத்திக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நரகநெருப்பில் என்றறென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்.