عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه قَالَ:
كُنَّا نُخْرِجُ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ، عَنْ كُلِّ صَغِيرٍ وَكَبِيرٍ، حُرٍّ أَوْ مَمْلُوكٍ، صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ، فَلَمْ نَزَلْ نُخْرِجُهُ حَتَّى قَدِمَ عَلَيْنَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ رضي الله عنه حَاجًّا، أَوْ مُعْتَمِرًا فَكَلَّمَ النَّاسَ عَلَى الْمِنْبَرِ، فَكَانَ فِيمَا كَلَّمَ بِهِ النَّاسَ أَنْ قَالَ: إِنِّي أَرَى أَنَّ مُدَّيْنِ مِنْ سَمْرَاءِ الشَّامِ، تَعْدِلُ صَاعًا مِنْ تَمْرٍ، فَأَخَذَ النَّاسُ بِذَلِكَ، قَالَ أَبُو سَعِيدٍ: فَأَمَّا أَنَا فَلَا أَزَالُ أُخْرِجُهُ كَمَا كُنْتُ أُخْرِجُهُ، أَبَدًا مَا عِشْتُ.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 985]
المزيــد ...
அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஒரு ஸாஉ உணவு அல்லது ஒரு ஸாஉ பாலாடைக் கட்டி அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம், அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமை, அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை ஆகியவற்றில் ஒன்றை (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாக முஆவியா ரழியல்லாஹு எம்மிடம் வரும்வரையில் இவ்வாறு கொடுத்து வந்தோம். முஆவியா இப்னு அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்யும் நோக்கத்துடன் எங்களிடம் வந்து மிம்பரில் அமர்ந்து மக்களிடம் பேசியபோது 'ஷாம் (சிரியா) நாட்டு உயர்ரகக் கோதுமை இரண்டு 'முத்துகள்' ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்குச் சமம் என்று தான் கருதுவதாகக் கூறினார். எனவே மக்கள் அதைச் செய்யத் தொடங்கினர். அபூ ஸஈத்; (ரழி) அவர்கள், 'நான் உயிருடன் இருக்கும் வரை, நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நான் கொடுத்த அதே அளவு ஸகாத் அல்-ஃபித்ரை தொடர்ந்து கொடுப்பேன்' என்று கூறினார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 985]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலும், அவருக்குப் பிறகு வந்த கலீஃபாக்கள் காலத்திலும், முஸ்லிம்கள் சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஸாஉ உணவை ஸகாத்துல் பித்ராக கொடுத்து வந்தனர். அந்த நாட்களில் அவர்களின் உணவு: பார்லி, உலர்ந்த திராட்சை, பதப்படுத்தப்பட்ட பாலாடைக் கட்டி மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவனாகும். ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துகளாகும். ஒரு முத் என்பது ஒரு சாதாரண மனிதனின் இரண்டு கைப்பிடிகள் கொள்ளும் கொள்ளளவிற்கு நிகரானதாகும். முஆவியா (ரழி) அவர்கள் கலீபாவாக இருக்கும் வேளை மதீனாவிற்கு வந்தார். அந்நேரம் சிறிய கோதுமை அதிகளவில் காணப்பட்டது. மதீனாவுக்கு வந்த போது மக்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்; அதில் அவர் : இரண்டு முத்து சிறிய கோதுமை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்குச் சமம் என்று தான் அபிப்பிராயப்படுவதாக குறிப்பிட்டார்கள். எனவே மக்கள் அவரது கூற்றின்படி செயல்படத் தொடங்கினர். ஆனால் இக்கருத்தை அபூ ஸஈத் (ரழி) ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வேளை அபூ ஸஈத் (ரழி) அவர்கள்: நான் உயிருடன் இருக்கும் வரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் நான் கொடுத்தது போலவே, ஸகாத்துல் பித்ரை கொடுப்பேன் என்று கூறினார்.