عَن أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ، فَإِنَّهُ لاَ يَدْرِي، لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ، فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 7072]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:
உங்களில் ஒருவர் தனது சகோதரனை நோக்கி ஆயுதத்தினால் சைக்கினை காட்டவேண்டாம். ஏனெனில், அவர் அறியாமலேயே ஷைத்தான் அவரது கையைத் உசுப்பிவிட, அவர் நரகப் படுகுழியில் போய் விழலாம்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 7072]
இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை நோக்கி எவ்விதமான ஆயுதத்தையும் கொண்டு சைக்கினை செய்வதை எச்சரிக்கின்றார்கள். ஏனெனில், அவன் அறியாமலேயே, ஷைத்தான் அவனது கையில் ஆயுதத்தை உசுப்பத் தூண்டிவிட, அவன் தனது சகோதரனைக் கொலைசெய்யவோ அல்லது துன்புறுத்தவோ செய்யலாம். விளைவாக, நரகப் படுகுழியில் அவனைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பாவத்தில் அவன் வீழ்ந்துவிடலாம்.