عَنْ أَبَي قَتَادَةَ رضي الله عنه أنَّهُ طَلَبَ غَرِيمًا لَهُ، فَتَوَارَى عَنْهُ ثُمَّ وَجَدَهُ، فَقَالَ: إِنِّي مُعْسِرٌ، فَقَالَ: آللَّهِ؟ قَالَ: آللَّهِ؟ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ أَوْ يَضَعْ عَنْهُ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1563]
المزيــد ...
அபூ கதாதா (ரழி) அவர்கள் தம்மிடம் கடன்பெற்ற ஒருவரைத் தேடிச் சென்றபோது, அவர் ஒழிந்து கொண்டார். பின்பு அவரைக் கண்டபோது, “நான் கஷ்டத்தில் உள்ளேன்” என்று கூறினார் அவர். அதற்கு அபூ கதாதா அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாகவா? அல்லாஹ்வின் மீது ஆணையாகவா? எனக் கேட்டுவிட்டு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக பின்வருமாறு அறிவித்தார்கள்:
யாராவது ஒருவருக்கு, அல்லாஹ் தன்னை மறுமையின் துன்பங்களில் இருந்து பாதுகாப்பது மகிழ்ச்சியைத் தரும் என்றிருந்தால், அவர் கஷ்டத்தில் இருக்கும் ஒரு கடனாளிக்கு அவகாசம் கொடுக்கட்டும், அல்லது தள்ளுபடி செய்யட்டும்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 1563]
தனக்குத் தரவேண்டிய கடனைத் தராமல் ஒழிந்து கொண்டிருந்த ஒரு மனிதரை அபூ கதாதா அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் போது அவரைக் கண்டு கொண்டார்கள். அப்போது அம்மனிதர், 'நான் கஷ்டவாளி, கடனைத் திரும்பத் தருவதற்கான பணம் என்னிடம் இல்லை' எனக் கூறினார்.
தன்னிடம் பணம் இல்லை எனச் சத்தியம் செய்யும் படி அவரிடம் கேட்டார்கள்.
அவரும், தான் கூறுவது உண்மையே எனச் சத்தியம் செய்தார்.
அப்போது அபூ கதாதா அவர்கள், நபியவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக இவ்வாறு கூறினார்கள்:
மறுமையின் துன்பங்கள், சிரமங்கள் மற்றும் பயங்கரங்களில் இருந்து பாதுகாக்கப்பட யார் விரும்புகின்றாரோ, அவர் சிரமத்தில் உள்ள ஒரு கடனாளியின் கடனுக்குத் தவணையை நீடித்துக் கொடுத்தோ, அல்லது கடனை பகுதியாகவோ, முழுமையாகவோ தள்ளுபடி செய்தோ இலகுபடுத்திக் கொடுக்கட்டும்.