عَنْ أَبِي بُرْدَةَ الْأَنْصَارِيِّ رَضيَ اللهُ عنهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا يُجْلَدُ أَحَدٌ فَوْقَ عَشَرَةِ أَسْوَاطٍ إِلَّا فِي حَدٍّ مِنْ حُدُودِ اللهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1708]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக, அபூ புர்தா அல் அன்ஸாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
எந்தவொரு மனிதருக்கும், அல்லாஹ் விதித்துள்ள ஒரு தண்டனைகளிலேயே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக்கூடாது.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 1708]
இங்கு நபியவர்கள் ஒரு மனிதருக்கு பாவங்களுக்காகவே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக் கூடாது எனத் தடுக்கின்றார்கள். இங்கு, கசையடி அல்லது அடித்தல் அல்லது குறிப்பிட்ட தண்டனை என மார்க்கத்தில் வந்துள்ள தண்டனைகள் நாடப்படவில்லை. இதன் அர்த்தமாவது, மனைவி, பிள்ளைகளுக்கு அடித்தல் போன்ற ஒழுக்கமூட்டல் தண்டனைகளில் இவ்வாறு அதிகரிக்கக்கூடாது என்பதாகும்.