عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضيَ اللهُ عنهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أُنْزِلَ -أَوْ أُنْزِلَتْ- عَلَيَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ، الْمُعَوِّذَتَيْنِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 814]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் தனக்குக் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
எனக்கு சில வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன. அவற்றைப் போன்று வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் இரு குல் ஸூராக்களும்) ஆகும்.

[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 814]

விளக்கம்

நபிகள் (ஸல்) அவர்கள் தனக்குக் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : எனக்கு அல்லாஹ் சில வசனங்களை இறக்கியுள்ளான். அவற்றைப் போன்று (பாதுகாப்புத் தேடுவதில்) வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் ஸூரா அல்பலக் மற்றும் ஸூரா அந்நாஸ் ஆகிய ஸூராக்கள்) ஆகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இவ்விரு ஸூராக்களினதும் மகத்தான சிறப்பைத் தெளிவுபடுத்தல்.
  2. இவ்விரு ஸூராக்களையும் ஓதி, எல்லா தீமைகளையும் விட்டுப் பாதுகாப்புத் தேட ஆர்வமூட்டல்
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الموري Малагашӣ الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு