عَنْ عَائِشَةَ أُمِّ المؤْمنينَ رَضيَ اللهُ عنها قَالَت: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«تُقْطَعُ اليَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6789]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு தீனாரின் கால்வாசி அல்லது அதைவிட அதிகான அளவில் கை வெட்டப்படும்.

[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 6789]

விளக்கம்

இங்கு நபியவர்கள், ஒரு திருடன் ஒரு தீனாரின் கால்வாசி அளவோ, அதற்கு மேற்பட்ட அளவோ திருடினால் அவனது கை வெட்டப்படும் எனத் தெளிவுபடுத்துகின்றார்கள். அது, 1.06 கிராம் தங்கத்துக்கு நிகரான பெறுமதியைக் கொண்டதாகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. திருட்டு பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
  2. திருடனுக்கான தண்டனையை அல்லாஹ் வரையறுத்துள்ளான். அதாவது அவனது கை வெட்டப்படவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: 'திருடும் ஆணின் மற்றும் பெண்ணின் கைகளை வெட்டுங்கள் (அல் மாஇதா : 38) நபியவர்களின் ஸுன்னா, வெட்டுவதற்கான நிபந்தனைகளை தெளிவுபடுத்தியுள்ளது.
  3. இந்த ஹதீஸில் 'கை' என்பதன் மூலம் நாடப்படுவது, மணிக்கட்டை, கையின் ஏனைய பகுதிகளில் இருந்து பிரிக்கும் மூட்டில் இருந்து வெட்டுவதாகும்.
  4. மக்களது சொத்துக்களைப் பாதுகாத்தல், அத்துமீற நினைக்கும் ஏனையோரை எச்சரித்தல் என்பன, திருடனின் கையை வெட்டுவதில் உள்ள சில மதிநுட்பங்களாகும்.
  5. தீனார் என்பது, தங்கத்தில் ஒரு மிஸ்கால் அளவாகும். தற்போதைய அளவின் படி, 24 கரட் தங்கத்தில் 4.25 கிராமுக்கு சமமாக உள்ளது. எனவே, ஒரு தீனாரில் நான்கில் ஒன்று என்பது, ஒரு கிராமை விட சற்று அதிகமாக இருக்கும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية الرومانية المجرية الموري Малагашӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு