عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه:
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي رَكْعَتَيِ الْفَجْرِ: {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ}، وَ{قُلْ هُوَ اللهُ أَحَدٌ}.

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 726]
المزيــد ...

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுக்கு முந்திய ஸுன்னாவில் قل يا أيها الكافرون قل هو الله أحد ஆகிய சூராக்களை ஓதினார்கள்.

[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 726]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுடைய முன் ஸுன்னாவில், முதல் ரக்அத்தில், ஃபாத்திஹாவுக்குப் பின்னர் ஸூரா அல்காபிரூனையும், இரண்டாம் ரக்அத்தில் ஸூரா அல்இக்லாஸையும் ஓதுவதை விரும்புவார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பஜ்ருடைய முன் ஸுன்னாவில் இவ்விரு ஸூராக்களையும் ஓதுவது ஸுன்னாவாகும்.
  2. இவ்விரு ஸூராக்களும் உளத்தூய்மையின் ஸூரா என அழைக்கப்படும். ஏனெனில் ஸூரத்துல் காஃபிரூனில், இணைவைப்பாளர்கள், அல்லாஹ்வை அன்றி வணங்கும் அனைத்தையும் விட்டு நீங்கிக் கொள்ளப்படுகின்றது. மேலும் அவர்கள் அல்லாஹ்வை வணங்குபவர்கள் அல்ல என்பதும் தெளிவாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அவர்களது இணைவைப்பு அமல்களை அழித்து விடுகின்றது. அல்லாஹ் மாத்திரமே வணக்கத்திற்கு தகுதியானவன் என்பதும் அதில் உள்ளது. இதேபோன்று, ஸூரா அல்இக்லாஸிலும், ஓரிறைக் கொள்கையும், உளத்தூய்மையும் கூறப் பட்டுள்ளதோடு, அல்லாஹ்வின் பண்புகளும் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (44)
மேலதிக விபரங்களுக்கு