عَنْ أَبِي حَازِمٍ قَالَ: قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ رضي الله عنه خَمْسَ سِنِينَ، فَسَمِعْتُهُ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي، وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ» قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ، أَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3455]
المزيــد ...
அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை) ஏற்படுத்திக்கொண்டு) அமர்ந்திருந்தேன். (ஒருமுறை) அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
''இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப்பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்;?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ''அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறை வேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 3455]
குடிமக்களின் விவகாரங்களை தலைவர்களும், அதிகாரிகளும் நிர்வகிப்பது போன்று பனூ இஸ்ராஈல்களின் விவகாரங்களை நபிமார்கள் நிர்வகித்து வந்தனர். அவர்களிடம் சீர்கேடுகள் தோன்றும் போதோல்லாம் அவர்களின் விவகாரங்களை சீர்செய்வதற்கும் அவர்கள் மாற்றிய சட்டதிட்டங்களை நீக்குவதற்காகவும்; நபிமார்களை அனுப்பினான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். ஆனால் என் உம்மத்திற்காக இதைச் செய்ய எனக்குப் பிறகு எந்த தீர்க்கதரிசியும் வரமாட்டார். எனக்குப் பிறகு, ஏராளமான கலீஃபாக்கள் இருப்பார்கள், அவர்களிடையே வேறுபாடுகளும் மோதல்களும் எழும். எனினும் எனக்குப்பின்னால் அதிகமான கலீபாக்கள் தோன்றி அவர்கள் மனிதர்களை ஆட்சி புரிவார்கள்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறிய போது 'உங்களுக்குப்பின்னர் கலீபாக்கள் அதிகரித்து விட்டால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விடுமே. அப்படியாயின் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் நம்மைப் பணிக்கின்றீர்கள்' என ஸஹாபாக்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வினவினர். ஒரு கலீஃபா இருக்கும் நிலையில் இன்னொருவருவருக்கு பைஅத் (சத்தியப் பிரமாணம்) பைஅத் செய்தால் முதல் கலீஃபாவிற்கான விசுவாசம் செல்லுபடியாகும், அதைக் கடைப்பிடிக்க வேண்டும், அதே நேரத்தில் இரண்டாவது கலீஃபாவிற்கான பைஅத் விசுவாசப் பிரமாணம் பாதிலாகும். (செல்லுபடியாக மாட்டாது) அவ்வாறு செயவது தடைசெய்யப்பட்டுள்ளது. கலீஃபாக்களுக்கான உரிமையை வழங்கி நிறைவேற்றுங்கள், அவர்களைப் பின்பற்றுங்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸுக்கு முரணாக இல்லாத விடயங்களில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால் உங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து அல்லாஹ் அவர்களை மறுமையில் விசாரிப்பான்.