عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ:
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ: مَنْ أَبَرُّ؟ قَالَ: «أُمَّكَ، ثُمَّ أُمَّكَ، ثُمَّ أُمَّكَ، ثُمَّ أَبَاكَ، ثُمَّ الْأَقْرَبَ فَالْأَقْرَبَ».
[حسن] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن أبي داود: 5139]
المزيــد ...
பஹ்ஸ் இப்னு ஹகீம் தனது தந்தை வழியாகத் தனது பாட்டனாரைத் தொட்டும் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:
நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம், “நான் யாருக்கு உபகாரம் புரிய வேண்டும்?” எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், “உமது தாயார், பின்பும் உமது தாயார், பின்பும் உமது தாயார், பின்பு உமது தந்தை, பின்பு அதற்கு அடுத்தடுத்து நெருக்கமாக இருப்பவர்கள்” என்று கூறினார்கள்.
[நம்பகமானது (ஹஸன்)] - [இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது] - [ஸுனன் அபூ தாவூத் - 5139]
இங்கு நபியவர்கள், உபகாரம் புரிவதற்கும், நல்ல முறையில் நடந்துகொள்வதற்கும், அழகாக இணைந்து நடப்பதற்கும், சேர்ந்துநடப்பதற்கும் மனிதர்களிலேயே மிகப் பொருத்தமானவர், தாய் தான் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். ஏனையோரை விடத் தாயாருக்கு இருக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் மூன்று தடவை அதனைக் கூறி, விதிவிலக்கின்றி ஏனைய அனைத்து மனிதர்களையும் விட அவரது சிறப்பைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பின்பு நபியவர்கள், அவரை அடுத்து உபகாரம் செய்யப்படுவதற்குத் தகுதியானவர் தந்தை என்றும், பின்பு அடுத்து நெருக்கமாக உள்ள உறவினர்கள் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். நெருக்கமாக உள்ள உறவினர்கள், தூரமாக உள்ள உறவினர்களை விட, சேர்ந்து நடக்கத் தகுதியானவர்களாகும்.