«لاَ تَلْبَسُوا الحَرِيرَ وَلاَ الدِّيبَاجَ، وَلاَ تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ وَالفِضَّةِ، وَلاَ تَأْكُلُوا فِي صِحَافِهَا، فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا وَلَنَا فِي الآخِرَةِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5426]
المزيــد ...
அப்துர் ரஹ்மான் இப்னு அபீலைலா அவர்கள்அறிவிக்கிறார்கள்:
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாம் இருந்தோம். அப்பொழுது அவர்கள் பருகுவதற்கு தண்ணீ|ர் கேட்டார்கள். நெருப்பு வணங்கி ஒருவன் தண்ணீர் கொண்டு வந்து கோப்பையை அவர்களின் கையில் வைக்க உடனே அக்கோப்பையை தண்ணீருடன் எறிந்து விட்டுக் கூறினார்கள், பல விடுத்தங்கள் அவனைத் தடுத்தும் இதனைச் செய்கிறானே என அங்கலாய்த்தவர்களாக இது நான் செய்யவில்லை என்றாலும் நபி ஸல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை நான் செவி மடுத்தேன்:
"நீங்கள் சாதாரண பட்டையோ அலங்காரப்பட்டையோ அணிய வேண்டாம். தங்கப் பாத்திரத்திலோ வெள்ளிப் பாத்திரத்திலோ குடிக்க வேண்டாம். அவ்விரண்டின் தட்டுகளில்; நீங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அவை இவ்வுலகில் அவர்களுக்குரியதும், மறுமையில் எங்களுக்குரியதுமாகும்".
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 5426]
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாவகையான பட்டு அணிவதை விட்டும் ஆண்களை தடை செய்தார்கள். தங்கப் பாத்திரத்திலோ, வெள்ளிப் பாத்திரத்திலோ தங்கம் வெள்ளி பைகளிலோ சாப்பிடுவதை குடிப்பதை விட்டும் ஆண்களையும் பெண்களையும் தடை செய்தார்கள். மறுமை நாளில் அவை முஃமின்களுக்கே பிரத்தியேகமானது என நபியவர்கள் கூறினார்கள்; ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்பட்டு இவ்வுலகில் அவற்றைப் பயன்படுத்துவதை விட்டும் தவிர்ந்து கொண்டனர். ஆனால் நிராகரிப்பாளர்களாகிய கபிர்களுக்கு மறுமையில் அவை கிடையாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி அவர்களின் இவ்வுலக வாழ்விலே தடை செய்யப்பட்டவைகளை பயன்படுத்தி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தனர்.