عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه:
أَنَّ رَسُولَ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ بِيَدِهِ، وَقَالَ: «يَا مُعَاذُ، وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ»، فَقَالَ: «أُوصِيكَ يَا مُعَاذُ لَا تَدَعَنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ تَقُولُ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ».
[صحيح] - [رواه أبو داود والنسائي وأحمد] - [سنن أبي داود: 1522]
المزيــد ...
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபியவர்கள் எனது கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : முஆதே! நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், 'அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வசுக்ரிக வஹுஸ்னி இபாததிக' (யா அல்லாஹ்! உன்னை நினைவுகூறவும், உனக்கு நன்றிசெலுத்தவும், அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு நீ உதவுவாயாக) என்று கூறுவதை விட்டுவிட வேண்டாம். என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன்.'
[ஸஹீஹானது-சரியானது] - [رواه أبو داود والنسائي وأحمد] - [سنن أبي داود - 1522]
நபியவர்கள் முஆத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், பின்வரும் துஆவைக் கூறுவதை விட்டுவிடவேண்டாம் என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன். 'யா அல்லாஹ் (வணக்கத்திற்கு நெருக்கமாக்கி வைக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும்) உன்னை நினைவுகூறவும், (கிடைக்கின்ற அருட்கொடைகளுக்காகவும், தடுக்கப்படுகின்ற சோதனைகளுக்காகவும்) நன்றிசெலுத்தவும், (உளத்தூய்மையுடனும், நபியவர்களைப் பின்பற்றியும்) அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக!'