عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 7311]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, முகீரா இப்னு சுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
எனது உம்மத்தில் ஒரு தரப்பினர் மிகைத்தவர்களாகவே இருப்பார்கள். அவ்வாறே அவர்கள் மிகைத்தவர்களாகவே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய கட்டளையும் வரும்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 7311]
இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, எனது உம்மத்தில் ஒரு தரப்பினர் மக்களை மிகைத்தவர்களாகவும், அவர்களை எதிர்ப்பவர்களை வென்றவர்களாகவும் இருப்பார்கள். மறுமை ஏற்பட முன்னர், இவ்வுலகின் இறுதிக் காலங்களில் அவர்களது உயிர்கள் கைப்பற்றப்படும் வரை, அவர்கள் மிகைத்தவர்களாகவே இருப்பார்கள்.