عن حكيم بن حِزَام رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم فأعطاني، ثم سَألته فأعطاني، ثم سألته فأعطاني، ثم قال: «يا حكيمُ، إن هذا المال خَضِرٌ حُلْوٌ، فمن أخذه بِسَخاوَة نفس بُورِك له فيه، ومن أخذه بإشراف نفس لم يُبَارَك له فيه، وكان كالذي يأكل ولا يَشَبَع، واليدُ العُليا خيرٌ من اليد السُفلى» قال حكيم: فقلت: يا رسول الله، والذي بعثك بالحق لا أرْزَأُ أحدًا بَعدك شيئاً حتى أفارق الدنيا، فكان أبو بكر رضي الله عنه يَدعو حكيماً ليُعطيه العَطَاءَ، فيأبى أن يقبل منه شيئاً، ثم إن عمر رضي الله عنه دعاه ليُعطيه فأبى أن يَقبله. فقال: يا معشر المسلمين، أُشهدكم على حكيم أني أعْرِض عليه حقه الذي قَسَمَه الله له في هذا الفَيْء فيَأبى أن يأخذه. فلم يَرْزَأْ حكيم أحدًا من الناس بعد النبي صلى الله عليه وسلم حتى تُوفي.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

"நான் ரஸூல் (ஸல்) அவர்களிடம் யாசித்தேன்.அப்பொழுது அவர்கள் எனக்குத் தந்தார்கள்.மீண்டும் அவர்களிடம் யாசித்தேன் அப்பொழுதும் அவர்கள் எனக்குத் தந்தார்கள்.அதன் பின்னரும் நான் அவர்களிடம் யாசித்தேன் அப்பொழுதும் அவர்கள் எனக்குத் தந்தார்கள்.அதன் பின்னர் அன்னார் ஹகீமே! இந்தப் பொருள் பசுமையானது,இனிமையானது.எவன் அதனை ஒரு கொடையாளி தானாக விரும்பிக் கொடுக்கும் நிலையில் பெற்றுக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகும்.எவன் அதனை ஆசையுடன் அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனை எடுத்துக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகாது.அவனின் நிலை உண்டும் வயிறு நிரம்பாதவன் போன்றதாகும்.இன்னும் மேல் கரம்,கீழ் கரத்தை விடவும் சிறந்ததாகும்."என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்"அப்பொழுது நான் அல்லாஹ்வின் தூதரே! எவன் தங்களை உண்மையைக் கொண்டு அனுப்பி வைத்தானோ அவன் மீது ஆணையாக உங்களுக்குப் பின்னர் நான் உலகை விட்டும் பிரியும் வரையில் யாரிடமிருந்தும் எதையும் எடுக்க மாட்டேன்.என்று கூறினேன்"என்று ஹகீம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.அதன் பின்னர் அபூ பக்ர் (ரழி) அவர்கள் ஹகீமுக்குக் கொடை கொடுப்பதற்காக அவரை அழைத்தார்கள்.ஆனால் அவர் அவரிடமிருந்து எதனையும் ஏற்க மறுத்து விட்டார்.பின்னர் உமர் (ரழி) அவர்கள் அவருக்குக் கொடுப்பதற்காக அவரை அழைத்தார்கள்.அப்பொழுதும் அதனை எற்க அவர் மறுத்து விட்டார்.அப்பொழுது உமர் (ரழி) அவர்கள் முஸ்லிம் கூட்டத்தினரே! நான் உங்களை ஹகீமின் மீது சாட்சியாக ஆக்குகிறேன்.இந்த வரிப் பணத்திலிருந்து அல்லாஹ் அவருக்கு நியமித்த பங்கை,அவருக்குரிய உரிமையை நான் அவருக்குக் கொடுக்கின்றேன் ஆனால் அவரோ அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்.இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்றார்கள்.இவ்வாறு ஹகீம் அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின்னர் தனது வபாத்து வரையில் எவரிடமிருந்தும் எதனையும் எடுத்துக் கொள்ள வில்லை
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:ஹகீம் இப்னு ஹிஸாம் (ரழி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் சில பொருட்களைக் கேட்டு வந்தார்கள்.அவருக்கு அதனை நபியவர்கள் கொடுத்தார்கள்.மீண்டும் அவரிடம் ஹகீம் வேண்டினார்.அப்பொழுதும் அவருக்கு நபியவர்கள் கொடுத்தார்கள்.அதன் பிரகும் அன்னாரிடம் ஹகீம் வேண்டினார்.அப்பொழுதும் அவருக்கு நபியவர்கள் கொடுத்தார்கள்.பின்னர் நபியவர்கள்"ஹகீமே!இந்தப் பொருட்கள் பசுமையானவை,இனிமையானவை" என்றார்கள்.அதாவது இந்தப் பொருட்கள் மனம் விரும்பக் கூடியவை.எனவே இனிமையான பார்க்க அழகான,பசுமையான கனிகளை நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அது போல இந்தப் பொருட்களின் இயற்கைப் பொலிவை நீங்கள் காணும் போது அதனை அடைந்து கொள்ள உங்கள் மனம் விரும்புகிறது.என்றார்கள்.பின்னர் நபியவர்கள்"ஒரு கொடையாளி தானாக விரும்பி அதனை ஒருவனுக்குக் கொடுக்கும் கால் அவன் அதனை பெற்றுக் கொண்டாலோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகும்" என்றார்கள்.அதாவது ஒரு பொருளைத் தனக்குத் தரும்படியாக எவரரையும் வற்புறுத்தாமலும்,அதன் மீது பேராசையும்,தீவிர ஆர்வமும் கொள்ளாமல் அவர்கள் தானாக விரும்பித் தரும் பொருளை ஒருவன் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அந்தப் பொருள் அவனுக்கு பரகத் மிக்கதாக இருக்கும்.அதாவது அதில் அல்லாஹ் பரகத்தை ஏற்படுத்துவான் அதன் காரணமாக அந்தப் பொருள் அற்பமாக இருந்தாலும் அதில் அபிவிருத்தி உண்டாகி அது அதிகரித்துச் செல்லும்.அவ்வமயம் அவனுக்குப் போதும் எனும் மன நிலை தோன்றும்.அதன் காரணமாக அவன் மனம் தேவையற்ற நிலையை அடையும்.மேலும் அவன் மனம் நிம்மதி அடையும்.மேலும் அதன் நிமித்தம் அவன் மகிழ்ச்சியோடு வாழ்வான்.என்பதாகும்.பின்னர்"எவன் அதனை ஆசையுடனும்,அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அதனை எடுத்துக் கொண்டானோ அவனுக்கு அதில் பரகத் உண்டாகாது" என்றார்கள் நபியவர்கள்.அதாவது அவன் அதன் மீது பேராசையும்,தீவிர ஆர்வமும் கொண்ட நிலையில் அது அவனை வந்தடையுமாயின் அதில் பரகத் இருக்காது.அதாவது அதிலிருந்து பரகத்தை அல்லாஹ் எடுத்து விடுவான்.அப்பொழுது அவன் மனம் போது மெனும் நிலையை அடையாது.ஆகையால் அவன் மனம் எப்பொழுதும் ஏழைமை யானதாக அடுத்தவர்களின் பால் தேவை கொண்டதாகவே இருக்கும்.எனவே பூமிக்கடியிலிருக்கும் பொக்கிசங்களைக் அவனுக்குக் கொடுத்தாலும் அவன் மனம் நிறையாது.என்பதாகும் மேலும் இதே கருத்தில் முஸ்லிமில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது."நான் செல்வங்களைப் பாதுகாப்பவன்.எனவே எவருக்கேனும் அதனை நானாக விரும்பிக் கொடுத்தால் அதில் அவனுக்கு பரகத் உண்டாகும்.மேலும் எவன் அதன் மீது ஆர்வம் கொண்டு என்னிடம் அதனைக் கேட்டுப் பெற்றுக் கொண்டாலோ அவனுடைய நிலை சாப்பிட்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றதாகும்"என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்) மேலும் "அவனின் நிலை உண்டும் வயிறு நிரம்பாதவன் போன்றதாகும்."என்று ரஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதன் கருத்தாவது,அவனின் நிலை இரைகொள்ளியின் நிலையைப் போன்றதாகும்.அதாவது அவன் எவ்வளவு உண்டாலும் அவனின் வயிறு நிரம்பாது அது போன்று பேராசைக் காரனுக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் அவன் மனம் நிறையாது.இது பேராசைக் காரனின் நிலை என்றால் யாசிப்பவனின் நிலை எப்படியிருக்கும்? அவனின் நிலை அதை விடவும் மோசமானது.எனவேதான் ரஸூல் (ஸல்) அவர்கள் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்களிடம் "நீங்கள் இதன் மீது ஆசை கொள்ளாமலும்,இதனை எதிர்பார்க்காமலும் இருக்கும் நிலையில் இது உங்களை வந்தடைந்தால் நீங்கள் அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.அவ்வாறில்லை யெனில் உங்கள் மனதை அதன் பால் செலுதத்தாதீர்கள்" என்றார்கள்.அதாவது எதன் மீது உங்களுக்கு ஆசையும் எதிர்பார்ப்பும் இருந்ததுவோ அது உங்களை வந்தடைந்தால் அதனை நீங்கள் எடுக்காதீர்கள்.மேலும் நீங்கள் வேண்டிக் கொண்ட ஒரு பொருள் உங்களிடம் வந்தால் அதனையும் நீங்கள் எடுக்காதீர்கள்.என்பதாகும்.மேலும் "மேல் கரம்,கீழ் கரத்தை விடவும் சிறந்ததாகும்."என்று ரஸூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.அதாவது யாசிக்கும் தாழ்ந்த கை.யைப் பார்க்கிலும் பேணிப்புள்ள மேலேயுள்ள கை சிறந்தது,என்பதாகும்.ஏனெனில் இது மற்ற கையைப் போன்று பிரரிடம் யாசித்து தனது அந்தஸ்தையும் கௌரவத்தையும் அழித்து தன்னை இழிவு படுத்திக் கொள்ள வில்லை.மாறாக யாசித்துத் தன்னை இழிவு படுத்திக் கொள்ளாமல் உயரத்தில் மேலோங்கி நிற்கிறது மேலும் ரஸூல் (ஸல்).அவர்களின் வபாத்திற்குப் பின்னர் தான் யாரிடமிருந்தும் எதனையும் எடுக்கப் போவதில்லை,என ஹகீம் இப்னு ஹிஸாம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகையில் "எவன் தங்களை உண்மையைக் கொண்டு அனுப்பி வைத்தானோ அவன் மீது ஆணையாக உங்களுக்குப் பின்னர் நான் உலகை விட்டும் பிரியும் வரையில் யாரிடமிருந்தும் எதையும் எடுக்க மாட்டேன்" என்று நபிகளாரிடம் கூறினார்கள் பின்னர் ரஸூல் (ஸல்) அவர்கள் வபாத்தானதும் அபூ பக்ர் (ரழி) அவர்கள் கிலாபத் பொருப்பை ஏற்றார்கள்.அவ்வமயம் அவர் அவருக்கு கொடை வழங்கிய போது அதனை அவர் எற்றுக் கொள்ள வில்லை.பின்னர் அபூ பக்ர் (ரழி) அவர்கள் வபாத்தானதும் உமர் (ரழி) அவர்கள் கிலாபத் பொருப்பை ஏற்றுக் கொண்டார்கள்.அவர்களும் அவருக்குக் கொடை வழங்க அவரை அழைத்த போது அப்பொழுதும் அதனை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை.அவ்வமயம் உமர் (ரழி) அவர்கள் மக்களை சாட்சியாக வைத்துச் சொன்னார்கள் "நான் இவருக்கு முஸ்லிம்களின் பைத்துல்மால் நிதியிலிருந்து கொடுக்கின்றேன்.ஆனால் அதனை அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்.எனவே இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்றார்கள்.மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் அவருக்கு உமர் (ரழி) அவர்களின் மீது எந்த வொரு குற்றச்சாட்டும் இருக்கக் கூடாது என்பதற்காகவும்,அவருடைய பாதுகாப்பு விடயத்திலிருந்து தாங்கள் நீங்கிக் கொண்டதை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவுமே உமர் (ரழி) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்.அப்படி அவர் கூறிய போதிலும் ஹகீம் (ரழி) அவர்கள் தங்களின் வபாத் வரையில் அவரிடமிருந்து எதனையும் எடுக்காது அதில் உறுதியாகவே இருந்தார்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு