عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «إن في الجنة شجرة يسير الراكب الْجَوَادَ الْمُضَمَّرَ السريع مائة سنة ما يقطعها». وروياه في الصحيحين أيضًا من رواية أبي هريرة رضي الله عنه قال: «يسير الراكب في ظلها مئة سنة ما يقطعها».
[صحيح] - [حديث أبي سعيد: متفق عليه. حديث أبي هريرة: متفق عليه]
المزيــد ...

சுவர்க்த்தில் ஒரு மரம் உள்ளது. அதன் (அதன் நிழலில்) வேகமாக ஓடும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதனை கடக்க முடியாது என அபூ ஸஈத் அல் குத்ரி ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் ஸஹீஹுல் புஹாரி மற்றும் ஸஹீஹூல் முஸ்லிமில் இடம் பெற்றிருக்கும் அபூ ஹுரைரா ரழி அவர்களின் அறிவிப்பில் அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது என பதிவாகியுள்ளது.
ஸஹீஹானது-சரியானது - இதன் இரண்டு அறிவிப்புக்கள் புஹாரீ,முஸ்லிம் ஆகியோர் அறிவித்தவைகளாகும்

விளக்கம்

இந்த ஹதீஸ் சுவர்க்கத்தின் ஞாபகத்தையும், சுவர்க்க வாசிகள் அனுபவிக்கும் பேரின்பம் குறித்தும் தெளிவு படுத்துகிறது.அத்துடன் சுவர்கத்தில் உள்ள மரங்கள், அதன் நிழல் குறித்த வர்ணனைகள் பற்றிய விஷயங்களையும் கொண்டுள்ளதுடன், குதிரையில் பயணிப்பவர் அம்மரத்தின் பிரமாண்டத்தினால் அதன் முடிவை அடைய முடியாமல் போவது தனது பயபக்திமிக்க அடியார்களுக்கு அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள மிகப் பெறும் சிறப்பாக உள்ளது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு