+ -

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه قَالَ:
كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الجَنَّةَ وَيُبَاعِدُنِي عَنِ النَّارِ، قَالَ: «لَقَدْ سَأَلْتَنِي عَنْ عَظِيمٍ، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ، تَعْبُدُ اللَّهَ وَلاَ تُشْرِكْ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجُّ البَيْتَ» ثُمَّ قَالَ: «أَلاَ أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الخَيْرِ: الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ، وَصَلاَةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ» قَالَ: ثُمَّ تَلاَ: «{تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ}، حَتَّى بَلَغَ {يَعْمَلُونَ}» ثُمَّ قَالَ: «أَلاَ أُخْبِرُكَ بِرَأْسِ الأَمْرِ كُلِّهِ وَعَمُودِهِ، وَذِرْوَةِ سَنَامِهِ؟» قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: «رَأْسُ الأَمْرِ الإِسْلاَمُ، وَعَمُودُهُ الصَّلاَةُ، وَذِرْوَةُ سَنَامِهِ الجِهَادُ» ثُمَّ قَالَ: «أَلاَ أُخْبِرُكَ بِمَلاَكِ ذَلِكَ كُلِّهِ؟» قُلْتُ: بَلَى يَا نَبِيَّ اللهِ، فَأَخَذَ بِلِسَانِهِ قَالَ: «كُفَّ عَلَيْكَ هَذَا» فَقُلْتُ: يَا نَبِيَّ اللهِ، وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَقَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ، وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ أَوْ عَلَى مَنَاخِرِهِمْ إِلاَّ حَصَائِدُ أَلْسِنَتِهِمْ».

[صحيح بمجموع طرقه] - [رواه الترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي: 2616]
المزيــد ...

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள், நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு சமீபமாகச் சென்றுவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள், 'நீங்கள் மிக முக்கியமான ஒன்றைப் பற்றிக் கேட்டுவிட்டீர்கள். இதை யாருக்கெல்லாம் அல்லாஹ் இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அது அவர்களுக்க இலகுவாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை -அவனுக்கு எந்த இணையும் கற்பிக்காத நிலையில் - வணங்க வேண்டும். மேலும், தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும். ஸகாத்தைக்கொடுக்கவேண்டும். ரமழானில் நோன்பு நோற்கவேண்டும். கஃபாவை ஹஜ் செய்யவேண்டும்.' என்று கூறிவிட்டு, 'நன்மையின் வாயில்களை உனக்கு அறிவித்துத் தரட்டுமா? நோன்பு ஒரு கேடயம். நீர் நெருப்பை அனைப்பது போன்று, தர்மம் பாவங்களை அனைத்துவிடும். ஒரு மனிதன் நடு இரவில் தொழவதும் (நன்மையின் ஒரு வாயிலாகும்.) பின்பு "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதினார்கள். பின்பு நபியவர்கள், 'ஒரு விடயத்தின் தலையான அம்சத்தையும், அதன் பிரதான தூணையும், அதன் உயர்நிலையையும் உனக்குக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்! அல்லாஹ்வுடைய தூதரே!' எனக் கூறியபோது, 'தலையான அம்சம் இஸ்லாமாகும். அதன் பிரதான தூண் தொழுகையாகும். அதன் உயர்நிலை ஜிஹாதாகும்.' என்று கூறிவிட்டு, 'அவை அனைத்தையும் பாதுகாத்துத் தரும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நான், ஆம்! அல்லாஹ்வுடைய நபியே! எனக் கூறியதும், தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள்' என்று கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய நபியே! நாம் பேசுவதற்கெல்லாம் குற்றம் பிடிக்கப்படுவோமா?' எனக் கேட்டபோது, 'உன் தாய் உன்னை இழக்கட்டும். முஆதே! மக்களை நரகில் முகங்குப்புற எறிந்து விடுவது, அவர்களது நாவின் அறுவடைகளைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?'

- - [سنن الترمذي - 2616]

விளக்கம்

முஆத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள் பயணித்துக்கொண்டிருக்கும் போது நான் நபியவர்களை நெருங்கிவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'மனித ஆத்மாக்களால் செய்யச் சிரமமான ஒரு அமலைப் பற்றி நீங்கள் கேட்டுள்ளீர்கள். யாருக்கெல்லாம் அல்லாஹ் அதனை இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அவர்களுக்கு அது இலகுவாக இருக்கும். இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுங்கள் :
முதலாவது : அல்லாஹ்வுக்கு எந்த இணையும் வைக்காது அவனை மாத்திரமே வணங்க வேண்டும்.
இரண்டாவது, தினமும் கடமையாக்கப்பட்டுள்ள ஸுபஹ், ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும், நிபந்தனைகள், அடிப்படைகள் மற்றும் கடமைகளைப் பேணித் தொழவேண்டும்.
மூன்றாவது, கடமையான ஸகாத்தைக் கொடுக்க வேண்டும். ஸகாத் என்பது, ஒரு சொத்து, குறிப்பிட்ட ஒரு அளவை அடையும் போது கடமையாகும் பணம் சார்ந்த ஒரு வணக்கமாகும். தகுதியானவர்களுக்கு அது ஒப்படைக்கப்பட வேண்டும்.
நான்காவது, நோன்பு நோற்கவேண்டும். அதாவது, வணக்கம் என்ற நோக்கத்துடன், அதிகாலை உதயமாகியதில் இருந்து, சூரியன் மறையும் வரை உணவு, பானம் போன்ற நோன்பை முறிக்கும் அனைத்தையும் தவிர்த்தல்.
ஐந்தாவது : ஹஜ் செய்தல். அதாவது, மக்காவை நாடிச் சென்று, அல்லாஹ்வை வழிபடும் நோக்கில் ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றல்.
பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நன்மையின் வாயில்களை அடையச் செய்யும் காரணிகள் பற்றி உமக்கு அறிவித்துத் தரட்டுமா? அதாவது, அந்தக் கடமைகளுடன், உபரியானவற்றையும் நீ செய்யவேண்டும் :
முதலாவது: உபரியான நோன்புகள். இவை இச்சைகளை உடைத்து, பலத்தைக் குறைத்து பாவத்தில் வீழ்வதைத் தடுக்கின்றன.
இரண்டாவது : உபரியான தர்மங்கள். இவை செய்யப்பட்ட பாவங்களை அணைத்து, அழித்து, அதன் தடயங்களையும் நீக்கிவிடும்.
மூன்றாவது : இரவுடைய இறுதி மூன்றில் ஒரு பகுதியில் தஹஜ்ஜுத் தொழுதல். பின்பு நபியவர்கள் "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் (தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆக் கேட்டல் போன்றவற்றின் மூலம்) பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமை நாளில் அவர்களது கண்களைக் குளிரச் செய்பவை மற்றும் சுவனத்தில் உள்ள இன்பங்களை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
பின்பு நபியவர்கள், 'மார்க்கத்தின் அடிப்படையையும், அது தாங்கியிருக்கும் தூணையும், அதன் உச்சநிலையையும் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள்.
அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'ஆம்! யா ரஸூலல்லாஹ்' என்று கூறினார்கள்.
அப்போது நபியவர்கள் கூறினார்கள் : அடிப்படையான அம்சம் இஸ்லாமாகும். அதாவது, ஷஹாதத் கலிமாவாகும். அதன் மூலம் தான் மார்க்கத்தின் அடிப்படையை அவன் அடைந்து கொள்கின்றான். அதன் தூண் தொழுகையாகும். தூண்கள் இல்லாமல் வீடில்லை என்பது போன்று, தொழுகையில்லாமல் இஸ்லாம் இல்லை. யார் தொழுகின்றாரோ, அவரது மார்க்கம் பலமடைந்து, உயர்வடைந்துவிடும். அதன் உயர்நிலை, அதாவது, அது உயர்வடைவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உயரச் செய்வதற்காக சிரமப்பட்டு, மார்க்கத்தின் எதிரிகளோடு போரிட்டு ஜிஹாத் செய்யும் போதே!
பின்பு நபியவர்கள், 'முன்சென்ற அனைத்தையும் முறையாகப் பேணிப் பாதுகாக்கும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டுவிட்டு, தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள். அவசியமில்லாத எதனையும் பேசிவிடாதே' என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நாம் பேசுகின்ற அனைத்துக்கும் அல்லாஹ் எம்மை விசாரித்துத் தண்டிப்பானா?' என்று கேட்கின்றார்கள்.
அதற்கு நபியவர்கள், 'உன் தாய் உன்னை இழக்கட்டும்' (இங்கு அவர்களுக்கெதிராக துஆச் செய்வது நோக்கமல்ல. அறிந்து, விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு விடயம் பற்றி விழிப்பூட்டும் போது அரபிகள் பாவிக்கும் ஒரு வார்ததையாகும்.) என்று கூறிவிட்டு, 'அவர்களின் நாவுகளின் அறுவடைகளாகிய, நிராகரிப்பு, ஏசுதல், புறம், கோள், இட்டுக்கட்டல் போன்றவற்றைத் தவிர, வேறு எவைதான் அவர்களை நரகில் முகங்குப்புற எறிகின்றன?' என்று கேட்டார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அறிவைக் கற்பதில் நபித்தோழர்களுக்கு இருந்த ஆர்வம். அதனால்தான், நபியவர்களிடம் இவ்வாறான கேள்விகளை அதிகம் கேட்பார்கள்.
  2. அமல்கள் சுவனம் நுழையக் காரணமாக அமைகின்றன என்பதை நபித்தோழர்கள் அறிந்திருப்பது அவர்களுடைய மார்க்க விளக்கத்தைக் காட்டுகின்றது.
  3. முஆத் (ரலி) அவர்களிடமிருந்து வெளிப்பட்ட கேள்வி மிக முக்கியமான கேள்வியாகும். ஏனெனில், அது தான் யதார்த்தத்தில், இந்த வாழ்க்கையினதும், உள்ளமையினதும் இரகசியமாகும். இந்த உலகில் இருக்கும் மனிதர்களோ, ஜின்களோ அனைவருமே, ஒன்றில் சுவனம் நுழைவதை அல்லது நரகில் நுழைவதை நோக்கிச் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் இந்தக் கேள்வி மிக முக்கியமாகின்றது.
  4. இஸ்லாத்தின் ஐந்து கடமைகளாகிய, ஷஹாதா, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் ஆகியவற்றை செய்வதினாலேயே சுவனம் நுழையமுடியும்.
  5. மார்க்கத்தின் அடிப்படை, முக்கியமானவற்றில் மிகப் பெறுமதியானது, கடமைகளில் மிக உயர்ந்தது, அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காமல் அவனை மாத்திரம் ஒருமைப்படுத்தி வணங்குவதாகும்.
  6. அல்லாஹ் தனது அடியார்கள் மீது செய்துள்ள அருளின் காரணமாக, அவர்கள் நற்கூலி மற்றும் பாவமன்னிப்பின் வழிகளை அதிகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நன்மையின் வாயில்களை அவர்களுக்குத் திறந்துகொடுத்துள்ளமை.
  7. கடமைகளை நிறைவேற்றிய பின்னர், உபரியான வணக்கங்கள் ஊடாக அல்லாஹ்வை நெருங்குவதன் சிறப்பு.
  8. இஸ்லாத்தில் தொழுகை என்பது, ஒரு கூடாரத்தைத் தாங்கியிருக்கும் தூணைப் போன்றது. அது விழுந்தால், கூடாரமே விழுந்துவிடுவது போன்று, தொழுகையில்லாவிட்டால் இஸ்லாமே இல்லை.
  9. ஒரு மனிதன் தனது மார்க்கத்தைப் பாதிக்கும் எதையும் பேசாமல் நாவைப் பாதுகாப்பது அவசியமாகும்.
  10. நாவைத் தடுத்துக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது தான் அனைத்து நன்மைகளுக்குமான அடிப்படையாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Урумӣ Канада الأوزبكية الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு