«إِنَّ اللهَ يَغَارُ، وَإِنَّ الْمُؤْمِنَ يَغَارُ، وَغَيْرَةُ اللهِ أَنْ يَأْتِيَ الْمُؤْمِنُ مَا حَرَّمَ عَلَيْهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2761]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
'நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். இறை நம்பிக்கையாளனான முஃமினும் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்'.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 2761]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முஃமின் ரோஷப்பட்டு கோபப்பட்டு வெறுப்பதை போன்று அல்லாஹவும் அவனின் கண்ணியம்,மகத்துவத்திற்கேற்ற நிலையில் ரோஷப்படுவதாகவும், கோபம் கொள்வதாகவும், வெறுப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் ரோஷப்படுவதற்கான காரணம் ஒரு முஃமின் அவனின் மீது தான் ஹராமாக்கிய விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, களவு, மது அருந்துதல் போன்று மாபாதகச் செயல்களை செய்வதினாலாகும்.