عَنْ عَلِيِّ بْنِ طَالِبٍ وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالاَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلاَةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ».
[ضعيف] - [رواه الترمذي]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ பின் அபீதாலிப் (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் கூறுகின்றனர் : "இமாம் தொழுகையில் ஒரு நிலையில்இருக்கும்போது நீங்கள் வந்தால் இமாம் செய்வதைப் போன்றே செய்யட்டும்".
இமாம் நிலை, ருகூஃ, ஸுஜூது, இருப்பு எந்த நிலையில் இருக்கும் போது வந்தாலும் அதே நிலையில் இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். சில பாமரர்கள் செய்வது போல் இமாம் நிலைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.