«من رَدَّتْه الطِّيَرة من حاجة فقد أشرك»، قالوا: يا رسول الله، ما كفارة ذلك؟ قال: «أن يقول أحدهم: اللهم لا خير إلا خيرك، ولا طير إلا طيرك، ولا إله غيرك».
[ضعيف] - [رواه أحمد] - [مسند أحمد: 7045]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யாருடைய தேவை நிறைவேறுவதிலிருந்து சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைத்து விட்டார், அதற்குரிய பரிகாரம் என்ன என வினவ, இறைவா நலவு உன்னிடமிருந்து மாத்திரம் தான், நல்ல சகுனமும் உன்னிடமிருந்து மாத்திரம் தான், உன்னைத் தவிர வேறு இறைவனில்லை என்று கூறட்டும்".
தான் முன்னெடுக்கவிருக்கும் ஒரு விடயத்தை விட்டும் யாரை தீய சகுனம் தடுக்கின்றதோ அவர் இணைவைப்பின் ஒரு வகையைச் செய்து விட்டார். இப்பாரிய பாவத்திற்கான பரிகாரம் என்னவென நபித்தோழர்கள் வினவிய போது அல்லாஹ்விடம் முழுப் பொறுப்பையும் சாட்டக்கூடிய, அவனுக்கு மாத்திரம்தான் சக்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய மேற்கண்ட வார்த்தையை மொழியுமாறு கூறினார்கள்.