"من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع".
[ضعيف] - [رواه الترمذي]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) கூறுகின்றார்கள் :"கல்வியைத் தேடி வெளியில் சென்றவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையிலேயே இருக்கின்றார்".
ஹதீஸ் விளக்கம் : தனது வீட்டிலிருந்தோ, நாட்டிலிருந்தோ மார்க்கக் கல்வியைத் தேடி வெளியேறிச் சென்றவர் வீடு திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய வெளியேறிச் சென்றவரைப் போலாவார். ஏனெனில் இவர் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதிலும், ஷைத்தானை இழிவாக்குவதிலும், தன்னை வருத்திக் கொள்வதிலும் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.
لطالب العلم أجْر المجاهد في ميادين القتال؛ لأن كلا منهما يقوم بما يُقَوِّي شريعة الله ويدفع عنها ما ليس منها.جيد