عن حذيفة بن اليمان رضي الله عنهما قال: صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فَافْتَتَحَ البقرة، فقلت: يركع عند المئة، ثم مضى، فقلت: يصلي بها في ركعة فمضى، فقلت: يركع بها، ثم افتتح النساء فقرأها، ثم افتتح آل عمران فقرأها، يقرأ مُتَرَسِّلًا: إذا مَر بآية فيها تَسبِيحٌ سَبَّحَ، وإذا مَر بسؤال سَأل، وإذا مَر بِتَعَوُّذٍ تَعَوَّذَ، ثم ركع، فجعل يقول: «سبحان ربي العظيم» فكان ركوعه نحوًا من قِيَامِهِ، ثم قال: «سمع الله لمن حمده، ربنا لك الحمد» ثم قام طويلًا قريبا مما ركع، ثم سجد، فقال: «سبحان ربي الأعلى» فكان سجوده قريبًا من قيامه.
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...

"ஓரிரவு ரஸூல் (ஸல்) அவர்களுடன் நான் தொழுதேன் அப்பொழுதவர்கள் அல் பகரா ஸூராவை ஆரம்பம் செய்தார்கள்.அதன் நூராவது வசனத்தில் வைத்து அவர்கள் ருகூஃ செய்வார்கள் என நான் நினைத்தேன்.ஆனால் அவர்கள் ஓதிக் கொண்டே இருந்தார்கள்.எனவே இந்த ஸூராவுடன் ருகூஃ செய்வார்கள் என்று நினைத்தேன்.ஆனால் அவர்கள் அதன் பின்னர் அந்நிஸாஉ அத்தியாயத்தையும் அதன் பின் ஆல இம்ரான் அத்தியாயத்தையும் ஆரம்பித்து ஓதினார்தள்.இதையெல்லாம் அவர்கள் தஜ்வீத் சட்டங்களை அனுசரித்துத் தர்தீலாக ஓதினார்கள்.அவ்வமயம் அல்லாஹ்வை துதி செய்து அவனைத் தூய்மைப் படுத்தும் வசனங்களைத் தாண்டும் போது தஸ்பீஹ் செய்தார்கள்.மேலும் அல்லாஹ்விடம் கையேந்தும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.இன்னும் பாதுகாப்புத் தேடும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்.பின்னர் ருகூஃ செய்தார்கள்.அதில்سبحان ربي العظيم எனும் வாசகத்தை ஓதினார்கள்.மேலும் அன்னாரின் ருகூஃ,அவர்கள் நிலையில் நின்றது போன்று நீளமாக இருந்தது.பின்னர் سمع الله لمن حمده، ربنا لك الحمد»என்று கூறினார்கள்.பின்னர் ருகூவில் தாமதித்தது போன்று நீண்ட நேரம் நின்றார்கள்.பின்னர் ஸுஜூத் செய்தார்கள்.அதில்سبحان ربي الأعلى என்று கூறினார்கள்.அவர்களின் ஸுஜூதும் ஏரத்தாழ அவர்களின் நிலையைப் போன்று நீண்டிருந்தது.என்று ஹுதைபா இப்னு அல்யமான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
ஸஹீஹானது-சரியானது - இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு முறை இரவுத் தொழுகை தொழுத போது அவர்களுடன் ஹுதைபா (ரழி) அவர்களும் தொழுதார்கள்.அவ்வமயம் நபியவர்கள் தொழுகையை நீட்டித் தொழுதார்கள்.அவ்வமயம் ஒரு ரகஅத்தில் அல்பகரா,அந்நிஸாஉ,ஆல இம்ரான் ஆகிய ஸூராக்களை ஓதினார்கள்.மேலும் அவர்கள் ஓதிக் கொண்டு இருக்கும் போது அதனிடையே அல்லாஹ்வைத் துதி செய்து அவனைத் தூய்மைப் படுத்தும் வசனங்களைத் தாண்டும் போது தஸ்பீஹ் செய்தார்கள்.மேலும் அல்லாஹ்விடம் கையேந்தும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.இன்னும் பாதுகாப்புத் தேடும் படியான வசனங்களைத் தாண்டும் போது அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார்கள்.மேலும் நபியவர்களின் தொழுகை எல்லாக் கட்டத்திலும் அதன் நீளம் ஏரத்தாழ ஒரே மாதிரியாக இருந்தது.எனவே அவர்களின் ருகூஃ அவர்களின் நிலையில் நின்றது போன்றும்,ஸுஜூத் ருகூவில் தாமதித்திருந்தது போன்றும் இருந்தது நீளமாக இருந்தது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி
மொழிபெயர்ப்பைக் காண