عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لا يَمُوتُ لأحَدٍ من المسلمين ثلاثة من الوَلَد فتَمسُّه النَّار إلا تَحِلَّة القَسَم».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹூ அறிவிக்கிறார்கள். முஸ்லிம் ஒருவரின் மூன்று குழந்தைகள் இறந்திருந்தால்,அவருக்கு (ஸிராத் எனும் பாலத்தில் ஏற்படும்) கட்டாய நரகத் தீண்டுதலே தவிர வேறு தீங்கு ஏற்படாது.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஒருவர் பெற்றெடுத்த குழந்தைகளில் பெண்பிள்ளைகளில் அல்லது ஆண்பிள்ளைகளில் மூவர் மரணித்து அதற்காக பொறுமை காத்து, நன்மையை நாடி அல்லாஹ்வின் இறைவிதியை பொருந்திக்கொண்டால் அக்குழந்தையின் பெற்றோரின் உடலை நரகம் தீண்டுவதை விட்டும் அல்லாஹ் ஹராமாக்கிவிடுகிறான். எனினும் அல்லாஹ்வின் திருவசனமான "உங்களில் எவரும் அதை கடக்காமல் இருக்க முடியாது" என்ற அல்லாஹ்வின் கூற்றின் அடிப்படையில் நரகத்தின் மீது அமைந்துள்ள பாலத்தை கடக்கும் போது ஏற்படும் சோதனையை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு