عن جابر رضي الله عنه قال: أراد بنو سلمة أن ينتقلوا للسكن قرب المسجد فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال لهم: «إنه قد بلغني أنكم تُريدون أن تنتقلوا قُرب المسجد؟» فقالوا: نعم، يا رسول الله قد أردنا ذلك، فقال: «بَنِي سَلِمَة، دِيارَكُم، تُكتب آثارُكُم، ديارَكُم تُكتب آثاركُم». وفي رواية: «إن بكلِّ خَطْوَة درجة».
[صحيح] - [رواه مسلم بروايتيه، ورواه البخاري بمعناه من حديث أنس-رضي الله عنه]
المزيــد ...

பனூஸலமா கோத்திரத்தார் மஸ்ஜித் நபவீயின் பக்கமாக இடம் பெயர விரும்பினர்.அது ரஸூல் (ஸல்) அவர்களுக்கு எட்டியது.அப்பொழுது நபியவர்கள் அவர்களிடம் "நீங்கள் பள்ளிவாசல் பக்கமாக இடம் பெயர விரும்புவதாக எனக்கு செய்தி கிடைத்துள்ளது" என்றார்கள்.அதற்கு அவர்கள்,அல்வாஹ்வின் தூதரே! ஆம் என்றனர்.அதற்கு நபியவர்கள் "பனூஸலமாவே! நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே இருந்து கொள்ளுங்கள் உங்களின் சுவடுகளுக்கும் நன்மை எழுதப்படும்.நீங்கள் உங்கள் இருப்பிடத்திலேயே இருந்து கொள்ளுங்கள் உங்களின் சுவடுகளுக்கும் நன்மை எழுதப்படும்" என்றார்கள்.என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.இன்னொரு அறிவிப்பில் "நிச்சயமாக ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு அந்தஸ்து உண்டு.என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸஹீஹானது-சரியானது - இது போன்று புஹாரீ அவர்களும் அறிவித்திருக்கிறார்

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:பள்ளிவாயலை விட்டும் தூரமான இடத்தில் வாழ்ந்து வந்த பனூஸலமா கோத்திரத்தார் பள்ளிவாயலுக்குச் சமீபமான இடங்களுக்கு இடம் பெயர விரும்பினர்.ஆனால் மதீனா நகர் நிரம்பி வழிவதை நபியவர்கள் விரும்பவில்லை.மாறாக அதனை மேலும் அபிவிருத்தி செய்து அதனை விஸ்தரிப்பதன் மூலம் முனாபிகீன்களின் பார்வையிலும்,முஷ்ரிகீன்களின் பார்வையிலும் முஸ்லிம்கள் கம்பீரமாகக் காட்சியளிக்க வேண்டு மென்பதே ரஸூல் (ஸல்) அவர்களின் விரும்பமாக இருந்தது.இதனை புஹாரியின் ஒரு அறிவிப்பு உறுதி செய்கின்றது.எனவே அவர்களிடம் நபியவர்கள் "நீங்கள் பள்ளிவாயலுக்குப் பக்கத்தில் இடம் பெயரப் போவதாக எனக்கு செய்தி கிடைத்துள்ளது"என்றார்கள்.அதற்கு அவர்கள் "ஆம் அல்லாஹ்வின் தூதரே! அதனை நாம் விரும்புகிறோம்" என்றனர்.அதற்கு நபியவர்கள் நீங்கள் உங்கள் இருப்பிடங்களில் இருங்கள்.உங்களின் சுவடுகளுக்கும் நன்மை எழுதப்படும்" என்று இரண்டு தடவைகள் கூறினார்கள்.மேலும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை,அல்லது ஒரு அந்தஸ்து உண்டென அதனை மேலும் தெளிவு படுத்தினார்கள்.மேலும்" உங்களில் எவருடைய இல்லம் தூரத்தில் இருக்கின்றதுவோ அவரின் கூலி மகத்தானது" என்று அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்.அப்போது அவர்களிடம் அபூஹுரைராவே! அது ஏன்? என்று வினவப்பட்டது.அதற்கு அவர்கள்,அது எட்டுகள் அதிகம் என்றபடியால்,என்றார்கள்.இந்த பேறு சிறு தூரமாயினும் பெருந் தூரமாயினும் சரி வீட்டில் இருந்து சிறந்த முறையில் வுழூ செய்து கொண்டு வாகனத்திலன்றி நடந்து செல்கின்றவனுக்கே அனுகூலமாகும்.அதாவது அவன் எடுத்து வைக்கும் எட்டுக்கள் குறைந்த எட்டுக்களாயினும் அதிக எட்டுக்களாயினும் சரி ஒவ்வொரு எட்டுக்கும் இரண்டு விடயங்கள் எழுதப்படும்.ஒன்று அவனின் ஒரு பதவி உயர்த்தப்படும்,மற்றொன்று அவனின் ஒரு பாவம் அழிக்கப்படும்.மேலும் "உங்களில் ஒருவர் நல்ல முறையில் வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக வெளியிறங்கிச் செல்லுங்கால் அவர் தன் வலது காலை உயர்த்துகையில் அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மை எழுதாமலும்,மேலும் அவர் தனது இடது காலை வைக்கும் போது அவருடைய ஒரு பாவத்தை அழித்து விடாமலும் இருப்பதில்லை.எனவே உங்களில் ஒருவர் விரும்பினால் நெருக்கமாக அல்லது தூரமாக இருந்து கொள்ளட்டும்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என்று நபித் தோழர் ஒருவர் கூறினார்கள்.என அபூதாவுத் அறிவிக்கின்றார்கள்.(563) இது அபூதாவுதின் ஸஹீஹான ஹதீஸ்களைச் சார்ந்தது என்று அல்பானீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح أبي داود (3/97) برقم (572) மேலும் "ஓரிரவு நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அழகிய தோற்றத்தில் என்னிடம் வந்து "முஹம்மதே! மேலே இருப்போர் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் விடயம் யாதென்று நீங்கள் அறிவீர்களா?என்றான்.அதற்கு நான் ஆம் அவர்கள் பிராயச்சித்தம் மற்றும் அந்தஸ்து பற்றி வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர்,என்றேன்.அதற்கு அவன் பிராயச்சித்தம் மற்றும் அந்தஸ்து என்றால் யாது? என்று வினவினான்.அதற்கு நான் தொழுத பின்னர் பள்ளிவாயலில் தங்கியிருப்பதுவும்,ஜமாஅத்தை அடைந்து கொள்வதற்காக காலால் நடந்து செல்வதுவும்,மனம் விரும்பாத சமயத்திலும் நல்ல முறையில் வுழூ செய்து கொள்வதுமாகும்.என்று ரஸூல் (அவர்கள்) கூறினார்கள்,என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்.இதனை அஹ்மத் அவர்கள் ரிவாயத் செய்துள்ளார்கள் (இல:3484) மேலும் இதனை அஷ்ஷைக் அல்பானீ அவர்கள் "صحيح الجامع الصغير وزيادته" (1/72) ல் ஸஹீஹான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.இந்த அந்தஸ்துகள் பின் வரும் விடயங்களைக் கொண்டே அநுகூலமாகும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.1:வுழூவுடன் பள்ளிவாசலுக்குச் செல்லல்,2:நற் கூலியை எதிர்பார்த்தல்,ஏனெனில் "செயல்கள் யாவும் எண்ணத்தைப் பொருத்தேயாம்.எல்லோருக்கும் அவரவர் எண்ணியதே அநுகூலமாகும்" என்று ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.3:தன் வீட்டிலிருந்து புறப்படும் போது பள்ளிவாசலுக்குச் செல்கிறேன் என்ற எண்ணத்துடனேயே வெளியேறிச் செல்லல்.4:தடங்கல் ஏதும் இருநதாலன்றி வாகனத்தில் போகாமல் கால் நடையாகவே செல்லல்.எனினும் தடங்கல் ஏதுமுள்ள மனிதன் வாகணத்தில் வருவதில் தவறில்லை.அவ்வமயம் வாகனச் சில்லின் ஒரு சுற்று அதன் ஒரு எட்டு எனக் கணிக்கப்படும்.ஏனெனில் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் அதன் பாகம் அது சுழலும் போது மேலும் கீழுமாகச் சுழன்று வருகின்றது.இது நிலத்திலிருந்து பாதத்தை உயர்த்துவதும் மீண்டும் அதனை பூமியின் மீது வைப்பதுவும் போன்றதாகும்.எனவே மனிதன் தடங்கல் ஏதும் உடையவனாக இருப்பின் அவன் வாகனத்தில் வருவதில் தவறு ஏதுமில்லை.எனவே இதற்கும் நடந்து செல்வதன் நன்மை கிடைக்கும்.ஆகையால் பள்ளிவாசலுக்கு நடந்து போய் வரும் மனிதனுக்கு அவனின் பாத எட்டுகளுக்காக வழங்கும் நன்மைகள் போன்று அல்லாஹ் வாகணத்தில் செல்லும் தடங்கல் உள்ளவனுக்கும நன்மைகள் வழங்குவான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு