+ -

عن سهل بن سعد رضي الله عنهما مرفوعاً: «ثنتان لا تُرَدَّانِ، أو قلما تردان: الدعاء عند النداء وعند البأس حِينَ يُلْحِمُ بَعْضُهُ بَعْضًا».
[صحيح] - [رواه أبو داود]
المزيــد ...

இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை.அல்லது அவை அரிதாக நிராகரிக்கப்படுகின்றன.அவையாவன அதான் சொல்லும் போது கேட்கும் துஆவும்,யுத்தத்தில் சிலர் சிலரோடு மோதிக் கொள்ளும் போது கேட்கும் துஆவுமாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

விளக்கம்

ஒரு முஜாஹித்-போராளி யுத்தகளத்தில் இருந்து கொண்டுகேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.என,அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதின் சிறப்பை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.மேலும் அதானும்,இகாமத்தும் சொல்லும் போது ஒரு முஸ்லிம் கேட்கும் துஆவையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்,என அதானின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடத்துகிறது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு